india

img

“இந்தியா” கூட்டணியில் அம்பேத்கர் பேரனின் கட்சி

இந்திய அரசியலமைப்பின் தந்தை யான டாக்டர் பி.ஆர். அம்பேத் கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர், வஞ்சித் பகுஜன் அகாடி (விபிஏ) கட்சித் தலைவராக உள்ளார். அவரது கட்சி வெள்ளியன்று “இந்தியா” கூட்டணியில் இணைந்து தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தொடங்கியது.

 பாஜகவை வீழ்த்த 27 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், தேசிய வாத காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்) ஆகிய கட்சிகள், மகாராஷ்டிரா மாநி லத்தில் மகா விகாஸ் அகாடி (எம்விஏ) என்ற பெயரிலான கூட்டணி மூலம் மக்கள வைத் தேர்தலில் களம் காண உள்ளது.  

இந்த எம்விஏ கூட்டணியில் தற்பொ ழுது தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், பிரகாஷ் அம்பேத்கரின் விபிஏ கட்சியும்  தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் இணைந்து ள்ளது.  

சிவசேனா வரவேற்பு பிரகாஷ் அம்பேத்கர், கூட்டணி அரங்கி ற்கு வருகை தந்த பொழுது சிவசேனா (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் அவரை ஆரத்தழுவி வரவேற்றார்.